வரலாற்றில் முதல் முறை.. கபினி அணையில் திறக்கப்பட்ட தண்ணீரால் மைசூர்-ஊட்டி சாலையில் வெள்ளம்
Recommended Video

மைசூர்: கபினி அணையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் மைசூர்-நஞ்சன்கூடு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1974ம் ஆண்டு கபினி அணை திறக்கப்பட்ட பிறகு, அதன் வரலாற்றில் இரண்டாவது முறையாக, வினாடிக்கு 80,000 கன அடி நீர் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு முன்பு 1992ம் ஆண்டு காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால், கபினி அணையில் இருந்து 76,000 கன அடி நீர் திறக்கப்பட்டதுதான் அதிகப்படியான நீர் அளவாகும். நேற்று திறக்கப்பட்ட சாதனை நீர் அளவால், ஆற்று வெள்ளம், மைசூர்-நஞ்சன்கூடு தேசிய நெடுஞ்சாலையில் (முன்பு எண் 212 இப்போது 766) புகுந்துவிட்டது.

மைசூரில் இருந்து ஊட்டி, அல்லது கேரளாவின் கோழிக்கோடு செல்லும் வழியில், நஞ்சன்கூடு அதற்கு அடுத்தபடியாக குண்டல்பேட்டை நகரங்கள் உள்ளன. குண்டல்பேட்டை வரை ஊட்டி, கோழிக்கோடு நகரங்களுக்கான வாகனங்கள் ஒரே சாலையில் செல்லும். குண்டல்பேட்டைக்கு பிறகு, ஊட்டி மற்றும் கோழிக்கோடு சாலைகள் தனித்தனியாக பிரிவடையும்.
ஆனால், மைசூருக்கும் நஞ்சன்கூட்டுக்கும் நடுவே சாலையில் வெள்ளம் சுமார் 5 அடி உயரத்திற்கு ஓடியதால், நேற்று மாலை முதல் மைசூரிலிருந்து, ஊட்டி, கோழிக்கோடு செல்லும் வாகனங்களும் வரும் வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
மைசூர் மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், போலீஸ் எஸ்.பி., அமித் சிங், தாசில்தார் தயானந்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை மடைமாற்றம் செய்யும் பணிகளை முடுக்கி விட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெங்களூர், மைசூர் மக்கள் பலரும் வீக் என்ட்டில் காரில் ஊட்டிக்கு செல்வது வழக்கம். ஆனால், நேற்றைய வெள்ள பாதிப்பால், அவர்கள் பெரும் சிரமப்பட்டனர். இன்றைக்கு அங்கு நிலவரம் சீரடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications