கிரிக்கெட் வாரியத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் பணியாளர்கள் பங்கேற்க தடை: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் நீக்கப்பட்ட தலைவர் என்.சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் செயல்பட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 6வது ஐ.பிஎல். போட்டிகளில் வீரர்களும் அணி நிர்வாகிகளும் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக அதாவது ஐ.பிஎல். போட்டி காலத்தில் முன்னாள் இந்திய அணி கேப்டன் கவாஸ்கரை நியமித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் நீக்கப்பட்ட என்.சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களின் பணியாளர்கள் எவருமே கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்றும் தடை விதித்துள்ளது. இதில் வீரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பணியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் நிர்வாகக் குழுவின் சி.இ.ஓவாக இருக்கும் சுந்தர் ராமன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவர். அவர் அப்பொறுப்பில் நீடிப்பதா? இல்லையா? என்பதை ஐ.பி.எல். போட்டிகளுக்கான தலைவர் கவாஸ்கர் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications