ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்: 'புரோக்கர்கள்', தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் அனுமதி!!
டெல்லி: ராணுவத்துக்கான தளவாடங்களை தடை செய்யப்பட்ட சில நிறுவனங்களிடம் வாங்குவதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்குவது குறித்தும் இதில் 'புரோக்கர்களை' அனுமதிப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ராணுவத்துக்கு தளவாடங்கள் வழங்கும் சில நிறுவனங்கள், முறைகேடுகளில் ஈடுபட்டதால் தடை செய்யப்பட்ட நிறுவனமாக கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. ராணுவத்துக்குத் தேவையான கனரக வாகனங்கள் கொள்முதல் செய்யும் போது, தாத்ரா யு.கே நிறுவனம் தன்னிடம் பேரம் பேசியதாக, அப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு, ராணுவ தளவாட கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட கடந்த 2012-ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம், கருப்புப் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மீதான தடையை விலக்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், தாத்ரா நிறுவனத்தின் பெயரில் 3 அல்லது 4 கனரக வாகன உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. தாத்ரா யு.கே. என்ற நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை "பாரத் எர்த் மூவர்ஸ்' பொதுத் துறை நிறுவனம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ராணுவத் தளவாடக் கொள்முதலில் தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
புதிய ராணுவ தளவாடக் கொள்முதல் கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் அதன் இறுதி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அமைச்சரவையின் அனுமதிக்கு வைக்கப்படும்.
தளவாடக் கொள்முதலில் 'புரோக்கர்களுக்கு' அனுமதி அளிக்கப்படும். ஆனால் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படமாட்டாது. ராணுவத்துக்கான சாதனங்களை தயார் செய்யும் பொதுத் துறை நிறுவனங்களின் உற்பத்தி அளவு 2016-இல் 40 சதவீதம் அதிகரிக்கப்படும். மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் எல்லைப் பகுதி சாலைகள் அமைப்பு (பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன்) பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்றார்.
-
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications