உலக அளவில் பலாத்காரங்களில் இந்தியாவுக்கு 3வது இடம், கொலையில் 2வது இடம்: ஐ.நா. அறிக்கை
டெல்லி: 2010ம் ஆண்டில் அதிக அளவில் பாலியல் பலாத்காரங்கள் நடந்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கொலை சம்பவங்களை பொறுத்தவரை இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
நாள்தோறும் செய்தித்தாள்களை பார்த்தால் இளம்பெண் பலாத்காரம், சிறுமி பலாத்காரம் ஏன் 80 வயது மூதாட்டி கூட பலாத்காரம் என்று செய்திகள் வருகின்றன. இந்நிலையில் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
அதன் விவரத்தை பார்ப்போம்,

அமெரிக்கா
கடந்த 2010ம் ஆண்டு உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகபட்சமாக 85 ஆயிரத்து 593 பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. இதையடுத்து பிரேசிலில் 41 ஆயிரத்து 180 பேர் பாலியல் பலாத்காரங்கள் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா
2010ம் ஆண்டில் அதிக பலாத்காரங்கள் நடந்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த ஆண்டு இந்தியாவில் 22 ஆயிரத்து 172 பலாத்காரங்கள் நடந்துள்ளன.

இங்கிலாந்து
2010ம் ஆண்டில் இங்கிலாந்தில் 15 ஆயிரத்து 892 பேரும், மெக்சிகோவில் 14 ஆயிரத்து 993 பேரும், பிரான்சில் 10 ஆயிரத்து 108 பேரும், ஜெர்மனியில் 7 ஆயிரத்து 724 பேரும், ஸ்வீடனில் 5 ஆயிரத்து 960 பேரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

கொலை
2012ம் ஆண்டில் பிரேசிலில் தான் அதிகபட்சமாக 50 ஆயிரத்து 108 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் 43 ஆயிரத்து 335 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா
நைஜீரியாவில் 33 ஆயிரத்து 817 பேரும், மெக்சிகோவில் 26 ஆயிரத்து 37 பேரும், காங்கோவில் 18 ஆயிரத்து 586 பேரும், தென்னாப்பிரிக்காவில் 16 ஆயிரத்து 259 பேரும், கொலம்பியாவில் 14 ஆயிரத்து 670 பேரும், பாகிஸ்தானில் 13 ஆயிரத்து 846 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications