உலக அளவில் பலாத்காரங்களில் இந்தியாவுக்கு 3வது இடம், கொலையில் 2வது இடம்: ஐ.நா. அறிக்கை
டெல்லி: 2010ம் ஆண்டில் அதிக அளவில் பாலியல் பலாத்காரங்கள் நடந்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கொலை சம்பவங்களை பொறுத்தவரை இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
நாள்தோறும் செய்தித்தாள்களை பார்த்தால் இளம்பெண் பலாத்காரம், சிறுமி பலாத்காரம் ஏன் 80 வயது மூதாட்டி கூட பலாத்காரம் என்று செய்திகள் வருகின்றன. இந்நிலையில் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
அதன் விவரத்தை பார்ப்போம்,

அமெரிக்கா
கடந்த 2010ம் ஆண்டு உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகபட்சமாக 85 ஆயிரத்து 593 பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. இதையடுத்து பிரேசிலில் 41 ஆயிரத்து 180 பேர் பாலியல் பலாத்காரங்கள் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா
2010ம் ஆண்டில் அதிக பலாத்காரங்கள் நடந்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த ஆண்டு இந்தியாவில் 22 ஆயிரத்து 172 பலாத்காரங்கள் நடந்துள்ளன.

இங்கிலாந்து
2010ம் ஆண்டில் இங்கிலாந்தில் 15 ஆயிரத்து 892 பேரும், மெக்சிகோவில் 14 ஆயிரத்து 993 பேரும், பிரான்சில் 10 ஆயிரத்து 108 பேரும், ஜெர்மனியில் 7 ஆயிரத்து 724 பேரும், ஸ்வீடனில் 5 ஆயிரத்து 960 பேரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

கொலை
2012ம் ஆண்டில் பிரேசிலில் தான் அதிகபட்சமாக 50 ஆயிரத்து 108 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் 43 ஆயிரத்து 335 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா
நைஜீரியாவில் 33 ஆயிரத்து 817 பேரும், மெக்சிகோவில் 26 ஆயிரத்து 37 பேரும், காங்கோவில் 18 ஆயிரத்து 586 பேரும், தென்னாப்பிரிக்காவில் 16 ஆயிரத்து 259 பேரும், கொலம்பியாவில் 14 ஆயிரத்து 670 பேரும், பாகிஸ்தானில் 13 ஆயிரத்து 846 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications