ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!

இந்திய- பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே இருநாட்டு வீரர்களும் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த 6 வீரர்கள் ஜம்முவில் உள்ள சீனாப் ஆற்றில் படகில் ரோந்து சென்றனர்.
அப்போது அவர்கள் சென்ற படகு திடீரென பழுதானது. அதேநேரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக படகு கவிழ்ந்தது.
படகில் இருந்த 6 வீரர்களில் 5 பேர் ஆற்றில் குதித்து தப்பித்தனர். சத்யஷீல் யாதவ் என்ற வீரர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற அந்த வீரரை, பாகிஸ்தான் ரேஞ்சர் படை வீரர்கள் காப்பாற்றி கைது செய்தனர். அந்த வீரரிடம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்தியாவிடம் வீரரை ஒப்படைத்துவிடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதன்படி இன்று மாலை 3 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா எல்லைப் பகுதிக்கு சத்யஷீல் யாதவை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அழைத்து வந்தனர்.
அதன் பின்னர் இருதரப்பு கமாண்டோக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் சத்யஷீல் யாதவ், இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.
தாம் விடுவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யஷீல் யாதவ், பாகிஸ்தான் படையினர் தம்மை நல்ல முறையில் நடத்தினர் என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications