இந்தியாவின் அன்றைய முள்ளிவாய்க்கால்- ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்- ரத்த வெள்ளத்தில் மிதந்த பொற்கோவில்!
பஞ்சாப் பொற்கோவிலுக்குள் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை முற்றாக அழிக்க மேற்கொண்டதுதான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.
Recommended Video

அமிர்தசரஸ்: பஞ்சாப் தனிநாடு கோரிய காலிஸ்தான் தீவிரவாதிகளை கூண்டோடு அழித்த ராணுவ நடவடிக்கைதான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார். பிரதமராக இருந்த இந்திரா காந்தி, பஞ்சாப் பொற்கோவிலுக்குள் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை முற்றாக அழிக்க மேற்கொண்டதுதான் இந்த ராணுவ நடவடிக்கை.
சீக்கியர் தேசிய இனத்துக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் 'காலிஸ்தான்' தனிநாடு கோரியது காலிஸ்தான் இயக்கம். 1980களில் ஆயுதமேந்திய இயக்கமாக உருவெடுத்தனர் காலிஸ்தான்கள்.

மத்திய அரசுக்கு பெரும் சவாலாக இருந்த காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்க தீர்மானித்தார் பிரதமராக இருந்த இந்திரா காந்தி. 1984-ம் ஆண்டு மே 25-ந் தேதி 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' பெயரில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் பஞ்சாப் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டனர். இதில் சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலும் தப்பவில்லை.
ஆனால் பொற்கோவிலுக்குள் உள்ளே உடனே ராணுவத்தினர் நுழைந்துவிடவில்லை. 1984 ஜூன் 1-ந் தேதியன்றுதான் ராணுவத்தினரை பொற்கோவிலுக்குள் நுழைய உத்தரவிட்டார் இந்திரா காந்தி. அப்போது உள்ளே பதுங்கி இருந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ராணுவம் பதிலடி கொடுத்தது. பின்னர் மெது மெதுவாக பொற்கோவிலுக்குள் உள்ளே நுழைந்த ராணுவம் தீவிரவாதிகளை வேட்டையாடியது. ஒரு வார காலம் அதாவது 1984 ஜூன் 8-ந் தேதி வரை இந்த ராணுவ நடவடிக்கை நீடித்தது.
காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் பிந்தரன் வாலேவை அழிக்க வேண்டும் என்ற முனைப்பில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அன்று அமிர்தசரஸ் பொற்கோவில் ரத்த வெள்ளத்தில்தான் மிதந்தது. காலிஸ்தான் தீவிரவாதிகளும் பொதுமக்களுமாக 1592 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது அப்பட்டமான இனப்படுகொலை என்பதுதான் சீக்கியர்களின் கருத்து.
இந்த ராணுவ நடவடிக்கையானது காலிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்திராவின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு எதிராக உலகம் முழுவதும் சீக்கியர்கள் கொந்தளித்து போராடினர். நம் நாட்டிலும் ராணுவத்திலும் அரசு உயர் பதவிகளில் இருந்தும் ஏராளமான சீக்கியர்கள் ராஜினாமா செய்தனர்.
இந்த நடவடிக்கையின் விளைவாக 4 மாதங்களில் சீக்கிய பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட துயரமும் நடந்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் 3,000 சீக்கியர்கள் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையால் அன்று பஞ்சாப் பொற்கோவிலானது 2009-ம் ஆண்டு ஈழத்து முள்ளிவாய்க்காலாகத்தான் இருந்தது என்பது வரலாறு.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications