விலகும் அதிகாரிகள்.. திறமையாளர்களை தக்க வைக்க 'டபுள் டிஜிட்' ஊதிய உயர்வுக்கு இன்போசிஸ் திட்டம்!
பெங்களூர்: அடுத்தடுத்து உயர் மட்ட அளவில் பலரும் வெளியேறி வருவதாலும், ஊழியர்கள் வெளியேறுவது அதிகரித்து வருவதாலும், பெரிய அளவில் சம்பள உயர்வைக் கொடுத்து அனைவரையும் தக்க வைக்கும் நடவடிக்கைகளில் இன்போசிஸ் இறங்கியுள்ளதாம்.
தற்போதுள்ள 1.5 லட்சம் ஊழியர்களுக்கும் இரட்டை இலக்கத்தில் சம்பள உயர்வை அளிக்கவும் இன்போசிஸ் நிறுவனர் -தலைவர் என்.ஆர். நாராயண மூர்த்தி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இந்தத் தகவல்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றுவோர் மூலம் வெளியாகியுள்ளது.
வளர்ச்சி இருக்கிறது.. ஆனால் ராஜினாமாவும் தொடர்கிறது
இன்போசிஸ் நிறுவனத்தில் வளர்ச்சி இருக்கிறது என்றாலும் கூட பலர் வெளியேறுவது தொடர் கதையாகியுள்ளது. இது இன்போசிஸ் நிர்வாகத்தைக் கவலைக்குள்ளாக்கியுள்ளதாம்.

மூத்த அதிகாரிகள் பலர் விலகல்
பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டனர். இதனால் இருக்கும் ஊழியர்களையும் தக்க வைத்துக் கொள்ள அவர்களுக்கு நல்ல சம்பள உயர்வைத் தர வேண்டிய கட்டாயம் இன்போசிஸ் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

பதவி உயர்வும் வருகிறது
ஊதிய உயர்வை மட்டும் கொடுக்காமல் பதவி உயர்வுகளையும் சேர்த்துக் கொடுத்து ஊழியர்களைக் குஷிப்படுத்தவும் இன்போசிஸ் நிர்வாகம் முயலுகிறதாம்.

8 முதல் 12 சதவீத ஊதிய உயர்வு
ஊதிய உயர்வானது 8 முதல் 12 சதவீதத்திற்குள் இருக்கும் என்று தெரிகிறது. வழக்கமாக ஜூன் மாதம்தான் தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளிக்கும் இன்போசிஸ். இந்த முறையும் அதேபோல வருகிற ஜூன் மாதம் ஊதிய உயர்வு இருக்கும் என்று தெரிகிறது.

வெளியேறுவதில் இன்போசிஸ் நம்பர் 1
இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலேயே அதிக அளவில் ஊழியர்கள் வெளியேறும் நிறுவனமாக இன்போசிஸ் உருவெடுத்துள்ளது. எதிர் நிறுவனங்கள் பலர் இன்போசிஸ் ஊழியர்களை வலை வீசாத குறையாக அள்ளிக் கொண்டு போவதும் அதிகரித்துள்ளதாம். கடந்த செப்டம்பருடன் முடிந்த காலாண்டின் இறுதியில் கிட்டத்தட்ட 17.3 சதவீத ஊழியர்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் குறைந்துள்ளனர்.

டிசிஎஸ் பரவாயில்லை
டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் ஊழியர்கள் குறைவானது 10.9 சதவீதமாக இருந்தது. இத்தனைக்கும் இங்கு 5 முதல் 10 சதவீத ஊதிய உயர்வே அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications