சார்க் தலைவர்களுக்கான அழைப்பு- சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு: பிரதமர் மோடி
டெல்லி: தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு மோடி முதல் முறையாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். அங்கு கூடியிருந்த கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அவர் பேசியதாவது:

மக்கள் எனது அரசிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது எனது அரசின் கடமை. நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அதன் விளைவாக, இந்தியாவுக்கான மரியாதையையும் அந்தஸ்தையும் உலகம் அளிக்கும்.
எனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். இதன் மூலம் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு தகவலை அளித்தோம். இது எப்படி நடந்தது என்று உலக நாடுகள் அதுகுறித்து இன்னமும் பேசி வருகின்றன.
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு சரியான முடிவு எவ்வளவு திறன்வாய்ந்ததாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சி காரணமாக மக்கள் நீண்ட காலமாக அதிருப்தி அடைந்திருந்தனர். மாற்று அணி அனுபவமும் உரிய பயனளிக்கவில்லை.
இந்நிலையில், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கூடுதல் பொறுப்பு எனது அரசுக்கு இருக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களிடையே அலையும், பொதுவான சிந்தனையும் இருந்திருக்காவிட்டால் பாஜகவுக்கு லோக்சபாவில் இந்த அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்காது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications