மதிய உணவு திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம்... சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறுகிறதா மத்திய அரசு?
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பானது சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறையை மீறும் வகையில் உள்ளதாக தகவல்கள் வெளியா
டெல்லி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக உள்ளது.
பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகள் கட்டாயம் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

மதிய உணவு திட்டத்தில் உள்ள மாணவர்கள் வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை அந்தந்த பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அத்திட்டத்தில் பணியாற்றும் சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் மேற்கண்ட விதி பொருந்தும்.
இந்த அறிவிப்பானது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு, ஆதார் எண் கட்டாயம் என்பது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தாது. அரசின் சலுகையை கிடைக்க தகுதியுடைய எந்த ஒரு குடிமகனும் ஆதார் எண் இல்லை என்ற காரணம் காட்டி அவர்களுக்கு அந்த சலுகைகள் வழங்காமல் இருக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் கடந்த 2015-ஆம் ஆண்டு, ஆதார் எண் திட்டமானது முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தின் பேரில் பெறுவதாக இருக்க வேண்டுமே தவிர அதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும் வரை கட்டாயமாக்க முடியாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும் ஆதார் எண்கள் இருந்தாலும் அரசின் எந்த திட்டத்தையும் எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த ஏதுவாக இருக்கும் என்று அரசு வாதிட்டது. இந்நிலையில் இலவச மதிய உணவு திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அரசு அறிவித்திருப்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறும் செயலாக உள்ளதாக தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications