மதிய உணவு திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம்... சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறுகிறதா மத்திய அரசு?
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பானது சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறையை மீறும் வகையில் உள்ளதாக தகவல்கள் வெளியா
டெல்லி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக உள்ளது.
பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகள் கட்டாயம் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

மதிய உணவு திட்டத்தில் உள்ள மாணவர்கள் வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை அந்தந்த பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அத்திட்டத்தில் பணியாற்றும் சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் மேற்கண்ட விதி பொருந்தும்.
இந்த அறிவிப்பானது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு, ஆதார் எண் கட்டாயம் என்பது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தாது. அரசின் சலுகையை கிடைக்க தகுதியுடைய எந்த ஒரு குடிமகனும் ஆதார் எண் இல்லை என்ற காரணம் காட்டி அவர்களுக்கு அந்த சலுகைகள் வழங்காமல் இருக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் கடந்த 2015-ஆம் ஆண்டு, ஆதார் எண் திட்டமானது முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தின் பேரில் பெறுவதாக இருக்க வேண்டுமே தவிர அதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும் வரை கட்டாயமாக்க முடியாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும் ஆதார் எண்கள் இருந்தாலும் அரசின் எந்த திட்டத்தையும் எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த ஏதுவாக இருக்கும் என்று அரசு வாதிட்டது. இந்நிலையில் இலவச மதிய உணவு திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அரசு அறிவித்திருப்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறும் செயலாக உள்ளதாக தெரிகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications