பெங்களூரில் அதிரடி ஐடி ரெய்டு.. புதிய ரூபாய் நோட்டு ரூ.4 கோடி சிக்கியது .. நகைகளும் பறிமுதல்
பெங்களூர்: பெங்களூர் நகரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது, இரு நபர்களிடமிருந்து மொத்தம் ரூ.4 கோடி மதிப்புள்ள புதிய ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு கட்டுக்கள் சிக்கியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 7.5 கிலோ கிராம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரில் நேற்றும் இன்றும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளில் ஐடி ரெய்டு நடைபெற்றது. முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் வீட்டிலும்கூட ரெய்டு நடந்தது.

இந்த நிலையில், ரெய்டின்போது இரு நபர்களிடமிருந்து மொத்தம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று மாலை பி.டி.ஐ செய்தி நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சோதனையின் போது 7 கிலோ கிராம் தங்கம் மற்றும் 7.5 கிலோ கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் யாரிடமிருந்து இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற தகவலை இதுவரை செய்தி நிறுவனம் வெளியிடவில்லை. ஐடி அதிகாரிகளும் வாய் திறக்க மறுக்கிறார்கள்.
கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் ஓரிரெண்டு புதிய நோட்டுக்களை கூட வாங்க முடியாமல் கியூவில் நிற்கும்போது, இவ்வளவு கோடிக்கு புதிய ரூபாய் நோட்டு எப்படி இரு நபர்களிடம் பிடிபட்டது என்பது ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.
புதிய ரூபாய் நோட்டையும் கருப்பு பணமாக பதுக்க, பண முதலைகள் முயல்கிறார்களா என்ற சந்தேகம் இதனால் ஏற்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications