ஜெயின் சமூகத்தினர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க சுப்ரீம் கோர்ட் தற்காலிக அனுமதி
டெல்லி: ஜெயின் சமூகத்தினர் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்கும் பாரம்பரியத்தை தற்போதைக்குத் தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சன்தாரா என்று அழைக்கப்படுகிறது இந்த வழக்கம். இதை ஜெயின் சமூகத்தினர் காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் கடந்த மாதம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது. இதுவும் ஒரு வகை தற்கொலைதான். எனவே இதை அனுமதிக்க முடியாது என்று அது கூறியிருந்தது. இதை சட்டவிரோதமானது என்றும் அது தீர்ப்பளித்திருந்தது.

இதையடுத்து ராஜஸ்தானிலும் நாடு முழுவதும் வசிக்கும் ஜெயின் சமூகத்தினர் மத்தியிலும் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஜெயின் சமூகத்தினர் ஜெய்ப்பூரில் பல ஆயிரக்கணக்கில் கூடி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஜெயின் சமூகத்தினர் இதை எதிர்த்து அமைதி வழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்கொலைதான் குற்றச் செயல். சந்தாரா மத சம்பிரதாயம் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சிலர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத வழிபாட்டுச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுவதால் இப்போதைக்கு இதைத் தொடரலாம் என்று கூறி அனுமதித்து வழக்கைத் தள்ளி வைத்தது.
ஜெயின் சமூகத்தில் மரணத்தைத் தழுவ ஒருவர் விரும்பினால் அன்ன ஆகாரம் இன்றி, தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருந்து உயிர் நீக்க அனுமதி உண்டு. இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல ஆண்டு தோறும் பல நூறு பேர் மரணத்தைத் தழுவி வருவதாக கூறப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications