ஜெயின் சமூகத்தினர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க சுப்ரீம் கோர்ட் தற்காலிக அனுமதி
டெல்லி: ஜெயின் சமூகத்தினர் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்கும் பாரம்பரியத்தை தற்போதைக்குத் தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சன்தாரா என்று அழைக்கப்படுகிறது இந்த வழக்கம். இதை ஜெயின் சமூகத்தினர் காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் கடந்த மாதம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது. இதுவும் ஒரு வகை தற்கொலைதான். எனவே இதை அனுமதிக்க முடியாது என்று அது கூறியிருந்தது. இதை சட்டவிரோதமானது என்றும் அது தீர்ப்பளித்திருந்தது.

இதையடுத்து ராஜஸ்தானிலும் நாடு முழுவதும் வசிக்கும் ஜெயின் சமூகத்தினர் மத்தியிலும் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஜெயின் சமூகத்தினர் ஜெய்ப்பூரில் பல ஆயிரக்கணக்கில் கூடி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஜெயின் சமூகத்தினர் இதை எதிர்த்து அமைதி வழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்கொலைதான் குற்றச் செயல். சந்தாரா மத சம்பிரதாயம் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சிலர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத வழிபாட்டுச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுவதால் இப்போதைக்கு இதைத் தொடரலாம் என்று கூறி அனுமதித்து வழக்கைத் தள்ளி வைத்தது.
ஜெயின் சமூகத்தில் மரணத்தைத் தழுவ ஒருவர் விரும்பினால் அன்ன ஆகாரம் இன்றி, தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருந்து உயிர் நீக்க அனுமதி உண்டு. இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல ஆண்டு தோறும் பல நூறு பேர் மரணத்தைத் தழுவி வருவதாக கூறப்படுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications