தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதா? அரசு அலுவலகத்தை சூறையாடிய கன்னட அமைப்பினர்
பெங்களூர் : தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள், விவசாயிகள் நீர்பாசன அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர் .
கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டத்தை கண்டித்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவின் ஷெட்டி தலைமையில் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள், கன்னட அமைப்பினர் மைசூர் அரண்மனை அருகில் உள்ள கர்நாடக நீர் பாசன தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (செவ்வாய்) காலை முதல் போராட்டம் நடத்தினர்.

ஒரு கட்டத்தில் அலுவலகத்தின் நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைந்த விவசாயிகள் அலுவலகத்தில் இருந்த மேஜை நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். இதனால் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
விவசாயிகள் போராட்டம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விவசாயிகளை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்களையும் மீறி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மேலும் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். கடந்த வியாழக்கிழமை கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications