தமிழகம் வீணாக காவிரி தண்ணீரை கடலில் கலக்கிறது.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி நதிநீர் வழக்கு விசாரணையின்போது, தமிழகம் மீது கர்நாடக அரசு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றைய வாதத்தில் கர்நாடக தரப்பு, தமிழகத்தை குற்றம்சாட்டியது.

தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் காவிரி தண்ணீரை தமிழகம் வீணாக கடலில் கலக்கிறது என்று கர்நாடகா கூறியது. நடுவர்மன்றத்தில் கர்நாடக அரசு வாதம் ஏற்கப்படவில்லை என்றும், பயிர் சுழற்சி முறை, நிலத்தடி நீர்மட்டம், மழை அளவு போன்றவற்றிலுள்ள வேறுபாடுகள் குறித்து கர்நாடக அரசு எவ்வளவோ எடுத்துக் கூறியும், அதை நடுவர்மன்றம் ஏற்கவில்லை என்றும் கர்நாடகா வாதிட்டது.












Click it and Unblock the Notifications