கர்நாடகா: நாளை மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைப்பேன்.. எடியூரப்பா நம்பிக்கை!
நாளை கர்நாடகாவில் தேர்தல் முடிவு வந்த பின் நேராக சென்று பிரதமர் மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுப்பேன் என்று பாஜகவின் சித்தராமையா நம்பிக்கையாக பேட்டியளித்துள்ளார்.
பெங்களூர்: நாளை கர்நாடகாவில் தேர்தல் முடிவு வந்த பின் நேராக சென்று பிரதமர் மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுப்பேன் என்று பாஜகவின் எடியூரப்பா நம்பிக்கையாக பேட்டியளித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 15ம் தேதி) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது..

கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 8ல் 6 கருத்து கணிப்புகளில் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் காங்கிரஸ், பாஜக என யார் அதிக இடங்களை பிடித்தாலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி யாருக்கு ஆதரவு தருகிறதோ அவர்களுக்கே, ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் பாஜக, காங்கிரஸ் இரண்டும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைக்கும் முயற்சியில் இருக்கிறது.
ஆனால் இத்தனை கருத்து கணிப்புகளுக்கும் மத்தியிலும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா வேறு விதமான நம்பிக்கையில் இருக்கிறார். பாஜக எப்படியும் 150க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அவர் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பே இவர் இதில் உறுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது எடியூரப்பா இன்னும் நம்பிக்கையா பேசியுள்ளார். அதன்படி தேர்தல் முடிவுகள் வந்தவுடன் உடனடியாக விமானமே மூலம் டெல்லி செல்வேன், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து நான் முதல்வராக பதவியேற்கும் விழாவிற்கு அழைப்பு விடுப்பேன் என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பும் இதேபோல் பதவி ஏற்பு விழா குறித்து இவர் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications