நாங்கள் எந்த தவறுமே செய்யவில்லை: கதுவா சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகள்
Recommended Video

ஸ்ரீநகர்: கதுவாவில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரும் தாங்கள் எந்த தவறும் செய்யவலில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமியை கடத்தி போதைப் பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் மைனர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை துவங்கியது. குற்றவாளிகளோ தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும், நார்கோ சோதனைக்கு உத்தரவிடுமாறும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் போலீசார் குற்றப்பத்திரிகையின் நகல்களை தங்களிடம் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். இந்த வழக்கு நியாயமான முறையில் நடக்க வேண்டும் எனில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியே தான் நடக்க வேண்டும் என சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் தீபிகா ரஜாவத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவருக்கும், சிறுமியின் குடும்பத்தாருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications