பத்மநாபசாமி கோவில் புதையலை கண்காட்சிக்கு வைக்க தயார்: உம்மன் சாண்டி அறிவிப்பு
திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவிலின் ரகசிய அறையில் கண்டெடுக்கப்பட்ட நகைகளை சுப்ரீம் கோர்ட் அனுமதியுடன் கண்காட்சி வைக்கத் தயாராக உள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற பத்மநாப சாமி கோவில். திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த கோவிலின் ரகசிய அறைகளில், ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொற்குவியல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ரகசிய அறையில் இருந்த தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களின் விவரப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று கேரள சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி, பத்மநாப சாமி கோவிலின் ரகசிய அறைகளில் கண்டெடுக்கப்பட்ட புதையலை சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் அருங்காட்சியகம் ஒன்றில் கண்காட்சிக்கு வைக்க தயார் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-
உலகிலேயே முதல்முறையாக...
இந்த வகையான புதையல் உலகின் எந்த பகுதியிலும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.
நம்பிக்கை...
இந்த புதையலை இதுநாள் வரை தொடர்ந்து பாதுகாத்து வந்திருப்பதன் மூலம், மன்னர் பரம்பரை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை, திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் உறுதி செய்துள்ளனர்.
புதையல் பற்றிய அறிக்கை...
கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட புதையல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை இன்னும் அரசுக்கு கிடைக்கவில்லை.
விசாரணை...
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஆகஸ்டு 6-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் அரசின் பதிலை அதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications