பத்மநாபசாமி கோவில் புதையலை கண்காட்சிக்கு வைக்க தயார்: உம்மன் சாண்டி அறிவிப்பு
திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவிலின் ரகசிய அறையில் கண்டெடுக்கப்பட்ட நகைகளை சுப்ரீம் கோர்ட் அனுமதியுடன் கண்காட்சி வைக்கத் தயாராக உள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற பத்மநாப சாமி கோவில். திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த கோவிலின் ரகசிய அறைகளில், ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொற்குவியல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ரகசிய அறையில் இருந்த தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களின் விவரப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று கேரள சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி, பத்மநாப சாமி கோவிலின் ரகசிய அறைகளில் கண்டெடுக்கப்பட்ட புதையலை சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் அருங்காட்சியகம் ஒன்றில் கண்காட்சிக்கு வைக்க தயார் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-
உலகிலேயே முதல்முறையாக...
இந்த வகையான புதையல் உலகின் எந்த பகுதியிலும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.
நம்பிக்கை...
இந்த புதையலை இதுநாள் வரை தொடர்ந்து பாதுகாத்து வந்திருப்பதன் மூலம், மன்னர் பரம்பரை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை, திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் உறுதி செய்துள்ளனர்.
புதையல் பற்றிய அறிக்கை...
கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட புதையல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை இன்னும் அரசுக்கு கிடைக்கவில்லை.
விசாரணை...
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஆகஸ்டு 6-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் அரசின் பதிலை அதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications