வாட்ஸ் அப்பில் ஆபாச படம்... ஏ.டி.ஜி.பி. மீது சரிதா நாயர் புகார்- விசாரணை
திருவனந்தபுரம்: வாட்ஸ் அப் வாயிலாக தனது ஆபாச காட்சிகளைப் பரப்பியது ஏ.டி.ஜி.பி. பத்மகுமார் தான் என சரிதாநாயர் அளித்துள்ள புகாரை டிஜிபி கிருஷ்ணமூர்த்தி விசாரிப்பார் என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளி வந்திருக்கிறார் சரிதாநாயர். சமீபத்தில் இவர் சம்பந்தப்பட்ட ஆபாசப் படக் காட்சிகள் வாட்ஸ் அப் மூலமாக மாநிலம் முழுவதும் பரவியது.
இது தொடர்பாக சரிதாநாயர் அளித்த புகாரின் அடிப்படையில் பத்தனம்திட்டா கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அதன்படி, சரிதாநாயரின் ஆபாசப் படக்காட்சிகளைப் பரப்பியவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் டிஜிபி பாலசுப்பிரமணியம் அலுவலகத்திற்கு சென்ற சரிதாநாயர், அவரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அப்புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-

கைது...
கேரள மாநிலத்தில் தென் மண்டல ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் பத்மகுமார், முன்பு திருவனந்தபுரம் சரக ஐ.ஜி.யாக இருந்த போது தான் நான் கைது செய்யப்பட்டேன்.

பறிமுதல்...
அப்போது என்னிடம் இருந்து 7 செல்போன்கள், 2 லேப் டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை கோர்ட்டில் ஒப்படைக்கும் போது ஒரு லேப்டாப்பும், 4 செல்போன்கள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டது.

ஆபாசக் காட்சிகள்...
3 செல்போன்களும், ஒரு லேப்டாப்பும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படவில்லை. அந்த லேப்டாப்பில் தான் என்னுடைய ஆபாச காட்சி இருந்தது.

ஐ.ஜி. தான் காரணம்...
எனவே அது வெளியில் கசிந்து வாட்ஸ்அப்பில் பரவ அப்போதைய போலீஸ் ஐ.ஜி. பத்மகுமார் தான் காரணமாக இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன்.

உரிய விசாரணை தேவை...
இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணை...
இந்நிலையில், சரிதாநாயர் புகார் தொடர்பாக டிஜிபி கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்துவார் என அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications