வாட்ஸ் அப்பில் ஆபாச படம்... ஏ.டி.ஜி.பி. மீது சரிதா நாயர் புகார்- விசாரணை
திருவனந்தபுரம்: வாட்ஸ் அப் வாயிலாக தனது ஆபாச காட்சிகளைப் பரப்பியது ஏ.டி.ஜி.பி. பத்மகுமார் தான் என சரிதாநாயர் அளித்துள்ள புகாரை டிஜிபி கிருஷ்ணமூர்த்தி விசாரிப்பார் என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளி வந்திருக்கிறார் சரிதாநாயர். சமீபத்தில் இவர் சம்பந்தப்பட்ட ஆபாசப் படக் காட்சிகள் வாட்ஸ் அப் மூலமாக மாநிலம் முழுவதும் பரவியது.
இது தொடர்பாக சரிதாநாயர் அளித்த புகாரின் அடிப்படையில் பத்தனம்திட்டா கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அதன்படி, சரிதாநாயரின் ஆபாசப் படக்காட்சிகளைப் பரப்பியவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் டிஜிபி பாலசுப்பிரமணியம் அலுவலகத்திற்கு சென்ற சரிதாநாயர், அவரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அப்புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-

கைது...
கேரள மாநிலத்தில் தென் மண்டல ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் பத்மகுமார், முன்பு திருவனந்தபுரம் சரக ஐ.ஜி.யாக இருந்த போது தான் நான் கைது செய்யப்பட்டேன்.

பறிமுதல்...
அப்போது என்னிடம் இருந்து 7 செல்போன்கள், 2 லேப் டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை கோர்ட்டில் ஒப்படைக்கும் போது ஒரு லேப்டாப்பும், 4 செல்போன்கள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டது.

ஆபாசக் காட்சிகள்...
3 செல்போன்களும், ஒரு லேப்டாப்பும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படவில்லை. அந்த லேப்டாப்பில் தான் என்னுடைய ஆபாச காட்சி இருந்தது.

ஐ.ஜி. தான் காரணம்...
எனவே அது வெளியில் கசிந்து வாட்ஸ்அப்பில் பரவ அப்போதைய போலீஸ் ஐ.ஜி. பத்மகுமார் தான் காரணமாக இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன்.

உரிய விசாரணை தேவை...
இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணை...
இந்நிலையில், சரிதாநாயர் புகார் தொடர்பாக டிஜிபி கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்துவார் என அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
-
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications