மேகி நூடுல்ஸ் உற்பத்தி ஆலை மூடல்... வேலையிழந்த 500 தொழிலாளர்கள்
பனாஜி: மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டதை அடுத்து கோவா மாநிலத்தில் இயங்கி வந்த மேகி நூடுல்ஸ் ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அந்த ஆலையில் பணியாற்றி வந்த 500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. குழந்தைகள் முதல். இளைஞர்கள் வரை, அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸில், காரீயத்தின் அளவு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை காட்டிலும், அதிகமா உள்ளதாக கண்டறியப்பட்டதால், இந்தியாவில் பல மாநிலங்களில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டது. அதோடு இந்தியாவில் உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெஸ்லே நிறுவனம் நூடுல்ஸ் தயாரிப்புக்கான தொழிற்சாலையை கோவா மாநிலம் பிச்சோலிம் என்ற ஊரில் அமைத்துள்ளது. அங்கு கடந்த 1997ம் ஆண்டு முதல் மேகி நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேகி நூடுல்ஸ்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தில் நூடுல்ஸ் தயாரிப்பு பணி முடங்கியது. கடந்த 5ம் தேதி பிச்சோலிமில் உள்ள மேகி நூடுல்ஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதையடுத்து 500 ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று நெஸ்லே நிறுவனம் கூறிவிட்டது. ஆலை செயல்படத் தொடங்கியதும், அனைத்து தொழிலாளர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் ஆலை நிர்வாகம் கூறிவிட்டதால் தினக்கூலி பெற்று வந்த தொழிலாளர்கள், வாடிய முகத்துடன், தொழிற்சாலையின் வாயிலில் சோகத்தோடு அமர்ந்துள்ளனர்.
மேகி நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பிச்சோலிம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த சுமார் 800 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் தினமும் சராசரியாக ரூ. 300 சம்பளம் பெற்று வந்தனர். இந்த நிலையில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதித்துள்ளதால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு விவசாய பணிகள் செய்து வந்த அவர்களுக்கு நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் நல்ல சம்பளம் கிடைத்தது. அந்த வேலை பறிபோனதால் அடுத்தவேலை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் காத்திருக்கின்றனர் தொழிலாளர்கள். பல்லாயிரக்கணக்கான உயிரைக் காக்க நூடுல்ஸ் உற்பத்தியை அரசு நிறுத்தியதை தொடர்ந்து 500 தொழிலாளர்களின் வேலை பறிபோயுள்ளது என்பதுதான் சோகம்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications