இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: ஒரு விமானி பலி, 2 பேர் படுகாயம்
மத்திய பிரதேசத்தில் பயிற்சிக்காக புறப்பட்ட 2 விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இரண்டு விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகின. இதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு விமானிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய் 3.0 மற்றும் மிராஜ் 2000 என்ற இரு விமானப்படை விமானங்களும் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன.

2 விமானங்கள் விழுந்து விபத்து
இந்தநிலையில் இரு விமானங்களும் புறப்பட்ட சிறிது நேரத்தில் மொரோனே என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. ஒரு விமானம் மொரேனா என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. மற்றொரு விமானம் அங்கிருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக நம்பப்படுகிறது. விமானத்தின் சேதம் அடைந்த பாகங்கள் எரிந்து கொண்டிருந்த காட்சிகளும் வெளியாகின.

விமானப்படை உத்தரவு
இரண்டு ஜெட் விமானங்களும் அதிவேக பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது நடுவானில் மோதியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விமான விபத்து தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் இந்திய விமானப்படை தளபதி வி ஆர் சவுதாரி விளக்கம் அளித்தார். பயிற்சியின் போது இரு போர் விமானங்களும் நடு வானில் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகினவா? என்பது தொடர்பாக விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

விமானி பலி
சுகோய் 30 விமானத்தில் இரு விமானிகளும் மிராஜ் 2000 விமானத்தில் ஒரு விமானியும் விபத்தின் போது இருந்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான போது இரண்டு விமானிகள் பத்திரமாக பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியேறிவிட்டனர். காயத்துடன் தப்பிய இரண்டு விமானிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு விமானி பலியானார். போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மிகுந்த வருத்தம் அளிப்பதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மிகவும் வருத்தம் அடைந்தேன்
இது தொடர்பாக சிவராஜ் சிங் சவுகான் கூறியிருப்பதாவது:- "மொரோனாவின் கோலாரஸ் என்ற பகுதியில் விமானப்படையின் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் விபத்துக்குள்ளானது என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். மீட்பு பணியில் ஒத்துழைப்பு அளிக்க உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட வேண்டும். விமானிகள் பத்திரமாக இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications