இரு கைகளை கூப்பி கேட்கிறேன்.. 3 கட்ட தேர்தல்களை ஒன்றாக்குங்கள்.. தேர்தல் ஆணையத்திடம் மம்தா கோரிக்கை
கொல்கத்தா: உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து மீதமுள்ல 3 கட்ட சட்டசபைத் தேர்தலை ஒரே நாளிலோ அல்லது இரு நாட்களிலோ நடத்தி முடிக்குமாறு தேர்தல் ஆணையத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தனை கட்ட தேர்தலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

எனினும் தேர்தல் ஆணையம் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதையடுத்து தற்போது வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. அதாவது மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
ஏப்ரல் 22, 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள 3 கட்டங்கள் நடைபெறவுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதமுள்ள 3 கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்த அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்தை மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டுள்ளார்.
With folded hands, I request Election Commission to hold three phases of polls on a single day or in two days. Please don't play with the lives of people: Bengal CM Mamata Banerjee in Chakulia, Uttar Dinajpur pic.twitter.com/FHnG9F4Hah
— ANI (@ANI) April 19, 2021
இதுகுறித்து உத்தர் தினாஜ்பூரில் சாகுலியாவில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் தேர்தல் ஆணையத்திடம் இரு கைகளை கூப்பி கேட்டுக் கொள்கிறேன். மீதமுள்ள 3 கட்ட தேர்தலை ஒரே நாளிலோ அல்லது இரு நாட்களிலோ நடத்த வேண்டும். மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications