என்னாது பாகுபலி 2 படம் இன்னும் பார்க்கலையா.. ஊழியரை டிஸ்மிஸ் செய்த "லூசு பாஸ்"!
பாகுபலி 2 திரைப்படம் பார்க்காத ஊழியரை ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: பாகுபலி 2 திரைப்படம் பார்க்காத ஊழியரை ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் சத்யராஜ், பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி திரைப்படத்தின் 2-ஆம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது. இந்நிலையில் ரிலீஸ் ஆன ஒரே நாளில் ரூ.126 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.
இந்நிலையில் ஒரு நிறுவனத்தில் ஒரு ஊழியர் இந்தப் படம் பார்க்கவில்லை என்ற காரணத்திற்காக வேலையை விட்டு நீக்கியுள்ளனர். வழக்கமாக பணியாளர்களை வேலை செய்யவில்லை, மோசடி, தாமத வருகை, ஒழுக்கக் கேடு, சரி வர பணிக்கு வராதது உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே பணி நீக்கம் செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் பாகுபலி படம் பார்க்காததால் இளைஞர் ஒருவரை பணியிலிருந்து நீக்கம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தை எடுத்த விதம் தொடர்பாக நிறுவனத்தில் குரூப் டிஸ்கஷன் நடத்தியுள்ளனர். அப்போது ஊழியர் மகேஷ் பாபு என்பவர் தப்புத் தப்பாக காட்சிகளைக் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட நிறுவன உரிமையாளர் மகேஷ் பாபு படமே பார்க்கவில்லை என்பதை அறிந்தார். இதனால் அவருக்குக் கோபம் வந்து விட்டது. படம் ரிலீஸ் ஆகி 6 நாள்களாகியும், படம்பார்க்க விடுப்பு அளித்தும் இதுவரை படம் பார்க்காததால் மகேஷ் பாபுவுக்கு நிறுவன உரிமையாளர் மெமோ கொடுத்தார். அதில் மகேஷ் அளித்த பதில் திருப்திகரமானதாக இல்லை என்பதால் மகேஷை பணியிலிருந்து நீக்கினார்.
இவர் பாஸா இல்லை லூஸான்னே தெரியலையே!
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications