காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாதாள நகரம் கண்டுபிடிப்பு... தீவிரவாதிகளின் கைவரிசையா? என விசாரணை
காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாதாள நகரம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதை போலீஸார் கண்டறிந்தனர்.
வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே பாதாளத்தில் சிறிய நகரம் ஒன்று கட்டப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இந்துக்கள் இந்த விஸ்வநாதரை தன் வாழ்வின் ஒரு முறையேனும் தரிசித்துவிட்டு வர வேண்டும் என்பது லட்சியம்.
இதனால் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். எனவே இப்பகுதி மிகவும் பிசியான பகுதியாகவே காணப்படும்.

போலீஸ் ரோந்து
இந்நிலையில் வாரணாசியை சேர்ந்த காவல் துறை எஸ்எஸ்பி ஆர்கே பாரத்வாஜ் கடந்த திங்கள்கிழமை இரவு ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது டால்மாண்டி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

மங்கலான வெளிச்சம்
ஹபீஸ் மசூதி பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது பழைய வீட்டின் கீழ்தளத்தின் ஒரு பகுதியில் இருந்து மங்கலான வெளிச்சம் வந்தது. இதையடுத்து அங்கு சென்று பார்வையிட்டார்.

40 பிரிவுகள்
அங்கு கார் பார்க்கிங் பணிகள் செய்யப்பட்டு கிடந்தன. இதை பார்த்த பாரத்வாஜுக்கும் போலீஸாருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த கட்டுமானம் டால்மாண்டியில் தொடங்கி பெனியா பார்க் சாலையில் முடிவடைகிறது. 40 பிரிவுகளாக ஒன்றன் பின் ஒன்றாக அறை போன்று கட்டப்பட்டு வருகிறது.

மார்க்கெட் போன்ற பகுதி
பயங்கரவாதிகள் டார்கெட்டாக இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே இதுபோன்று பாதாள நகரம் கட்டப்படுவது வளர்ச்சி துறை அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸாருக்கு தெரியாமல் இருந்தது எப்படி என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். மார்க்கெட் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த பாதாள நகரத்தில் பெரிய பெரிய கன்டெய்னர்கள் உள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்
மசூதியை சுற்றியுள்ள இடமும் தோண்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாரத்வாஜ் கூறுகையில், பாதாளத்தில் ஒரு மார்க்கெட் போன்று ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருவது உண்மையில் ஆபத்தான விஷயம் என்றாலும் கூட டால்மாண்டியா பகுதியில் ஒட்டுமொத்த மார்க்கெட்டும் அமைப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications