எல்லையில் போர் பதற்றம்: சீன அதிபர் மற்றும் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மோடி!
சீன அதிபர் ஜிங்பிங் மற்றும் பிரதமர் லிகெகியாங்கிற்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: சீன அதிபர் ஜிங்பிங் மற்றும் பிரதமர் லிகெகியாங்கிற்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்லாம் விவகாரத்தில், இந்தியா மற்றும் சீனா எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இருநாடுகளும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து வருகின்றன.

எல்லையில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டு வரும் சீனா, இந்தியாவை அவ்வப்போது ராணுவ வீரர்களை திரும்ப பெறக்கோரி எச்சரித்து வருகிறது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சீன அதிபர் ஜிங்பிங் மற்றும் அந்நாட்டு பிரதமர் லி கெகியாங்கிற்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்நாட்டின் சமூக வலைதளமான சீன வெய்போ இணையதளத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பிரிக்ஸ் மாநாட்டின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன அரசு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் சீனாவின் சிசுசுவான் மாகாணதில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்தும் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் இந்த கருத்துக்களுக்கு ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் சீன சோஷியல் மீடியாவில் ரியாக்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications