அன்னை தெரசா அணிந்த வெள்ளுடைக்கு பிராண்ட் அடையாளம்.. வணிக நோக்கத்தில் இனி பயன்படுத்த முடியாது
கருணையே உருவான அன்னை தெரசா அணிந்த நீல நிற கோடுகளை ஓரமாக கொண்ட வெள்ளை நிற புடவைக்கு பிராண்ட் அடையாளம் பெறப்பட்டுள்ளது.
கொல்கத்தா: உயிர் பிரியும் வரை தனது சேவையை இந்த உலக மக்களுக்காக கொடுத்து மகிழ்ந்த அன்னை தெரசாவை நினைத்தவுடன் அவர் அணிந்த புடவையும் அனைவரின் கண்ணிலும் நிழலாடும்.
நீல நிறக் கோடுகளை உடைய அந்த வெள்ளைப் புடவைக்கு அறிவுசார் உரிமை தற்போது பெறப்பட்டுள்ளது. இனி இந்தப் புடவையை யாரும் வணிக நோக்கத்தில் பயன்படுத்த முடியாது.
மிஷினரிஸ் ஆப் சேரிட்டியில் உள்ள சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகள் சேவை புரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அன்னை தெரசா கட்டிய புடவை போன்றே கட்டி இருப்பார்கள்.

வணிக நோக்கத்தை தடுக்க..
கடந்த 2013ம் ஆண்டு தெரசாவின் வெள்ளை நிறப் புடவைக்கு அறிவுசார் உரிமை பெற கோரப்பட்டது. வணிக நோக்கத்தில் இதனை யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே இது செய்யப்பட்டதாக சேரிட்டியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

விரும்பினால் அனுமதி..
எனினும் யாராவது இந்த வகை சேலையை அணிய விரும்பினால் சேரிட்டிக்கு அனுமதி கடிதம் எழுதலாம். அதில் வணிக நோக்கம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் இந்த சேலையை அணிய அனுமதியளிக்குமாம் சேரிட்டி.

அன்னையின் அடையாளம்
அல்பேனியாவை சேர்ந்த பெண் துறவியான அன்னை தெரசா 1948 ஆம் ஆண்டு வாடிக்கனிடம் இருந்து அனுமதி பெற்று, இந்த ஆடையையும், கழுத்தில் சிறியதொரு சிலுவையையும் அணிய தொடங்கினார். அதுவே அவருடைய அடையாளமாக மாறிவிட்டது.

தவறாக பயன்படுத்துவதை தடுக்க
நேபாளம் நாட்டில் அன்னை தெரசா பெயரில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஆனால் அந்தப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதுபோன்று அன்னை தெரசா பெயரை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே அறிவுசார் உரிமை பெறப்பட்டுள்ளதாக சேரிட்டி கூறியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications