கேரளாவில் மாதா அமிர்தானந்த மயிதேவியின் பிறந்த நாள் விழாவில் மோடி பங்கேற்பு!
திருவனந்தபுரம்: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி இன்று கேரளாவில் நடைபெற்ற மாதா அமிர்தானந்த மயிதேவியின் 60வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டார்.
பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நாடு முழுவதும் தொடர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று அத்வானி, ராஜ்நாத்சிங், சிவ்ராஜ்சிங் செளகான் ஆகியோருடன் ஒரே மேடையில் மோடி பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றடைந்தார் மோடி. அவர் தங்கியிருந்த ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து இன்று முற்பகல் நடைபெற்ற மாதா அமிர்தானந்த மயி தேவியின் 60வது பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டார்.
மெக்காலே கல்வி முறையால் தவறான பார்வை
இதில் பேசிய நரேந்திர மோடி, மெக்காலே கல்வித் திட்டம் நமது சன்னியாசிகள், சாதுக்கள் பற்றி தவறான கற்பிதத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. அவர்கள் சமூகத்துக்கு சேவையாற்றவே வாழ்கின்றவர்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சன்னியாசிகள், சாதுக்கள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாம் விவேகானந்தரையோ, அரவிந்தரையோ நேரில் பார்த்தது இல்லை. ஆனால் மாதா அமிர்தானந்த மயிதேவி போன்றோரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த பிறந்த நாள் விழா சுயநலத்துக்கானது அல்ல.. சமூக நலனுக்கானது என்றார்.
-
கருப்பு தங்கம் ஜாக்பாட்! புதினின் சீக்ரெட் ஆஃபர்.. உங்க கிச்சன் வரை ஊடுருவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications