என்டிடிவி ஒரு நாள் ஒளிபரப்பு தடை வழக்கு.. அவசரமில்லை என 5ம் தேதிக்கு தள்ளி வைத்தது சுப்ரீம் கோர்ட்
என்டிடிவி தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடைவிதிக்கப்பட்டது தொடர்பான விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்து வைத்துள்ளது.
டெல்லி: மத்திய அரசு விதித்த ஒரு நாள் ஒளிபரப்புக்கு தடைக்கு எதிராக என்டிடிவி தொடர்ந்த வழக்கு டிசம்பர் 5ம் தேதி விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இன்றே விசாரிக்கக் கூடிய அளவிற்கு அவசர வழக்கு இது இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக என்டிடிவி செய்திகளை ஒளிபரப்பியது. அப்போது, நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ விவரங்களையும், ரகசியங்களையும் டிவியில் பகிரங்கமாக ஒளிபரப்பியதாக மத்திய அரசு என்டிடிவி மீது குற்றம்சாட்டியது. மேலும், அதனுடைய ஒரு நாள் ஒளிபரப்பை தடை விதித்தும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு நாடு முழுவதில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. பத்திரிகை சுதந்திரத்தை மீறும் செயல் இது என்று அரசியல் கட்சித் தலைவர்கள், இந்திய செய்தி ஆசிரியர்கள் சங்கம் என அனைத்து தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து, மத்திய அரசு என்டிடிவியின் ஒளிபரப்பிற்கு தடை விதித்திருந்ததை நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், என்டிடிவிக்கு எதிரான மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் என்டிடிவி நிர்வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிக்கவும் என்டிடிவி நிர்வாகம் கோரியது.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு என்டிடிவியின் ஒருநாள் ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. மேலும், அடுத்த மாதம் 5ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications