பாகிஸ்தானுடனான யுத்தத்தின் போது ஆர்.எஸ்.எஸ். உதவியை கேட்டார் நேரு: உமாபாரதி
பாகிஸ்தானுடனான யுத்தத்தின் போது ஆர்.எஸ்.எஸ். உதவி கோரி அதன் தலைவராக இருந்த கோல்வாக்கருக்கு நேரு கடிதம் எழுதியதாக மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
போபால்: பாகிஸ்தானுடனான யுத்தத்தின் போது ஆர்.எஸ்.எஸ். உதவி கோரி அதன் தலைவராக இருந்த கோல்வாக்கருக்கு நேரு கடிதம் எழுதியதாக மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தைவிட 3 நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் யுத்தத்துக்கு தயாராகிவிடும் என்பது அதன் தற்போதைய தலைவர் மோகன் பகவத் பேச்சு. அவரது ராணுவத்தை இழிவுபடுத்தும் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஹரிசிங் மறுப்பு
இந்நிலையில் போபாலில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியதாவது:
1948-49 காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தார். ஆனால் ஷேக் அப்துல்லா ஹரிசிங் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர விரும்பினார்.

பாகிஸ்தானின் யுத்தம்
அப்போது திடிரென காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஜம்முவின் உதம்பூர் வரை பாகிஸ்தான் முன்னேறியது.

ஆர்.எஸ்.எஸ். உதவி
அப்போது இந்திய ராணுவம் யுத்தத்துக்கு தயாராக இல்லை. இதனால் பிரதமராக இருந்த நேரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் கோல்வாக்கருக்கு கடிதம் எழுதி உதவி கேட்டார்.

யுத்தத்துக்கு உதவிய ஆர்.எஸ்.எஸ்.
இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பாகிஸ்தானுக்கு எதிரான யுத்தத்துக்கு உதவினர். எனினும் மோகன் பகவத்தின் கருத்து குறித்து தாம் எதுவும் சொல்ல முடியாது.
இவ்வாறு உமாபாரதி கூறினார்.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
கடன் வாங்கி 30 வருடம் ஆகிட்டு.. உடனே ரூ.32,459 கோடியை தரணும்.. பாகிஸ்தானுக்கு UAE விதித்த கெடு -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications