ஜனாதிபதி வேட்பாளர் யார்? அமித்ஷா தலைமையில் ராஜ்நாத், ஜேட்லி, வெங்கையா குழு!
டெல்லி: ஜனாதிபதி வேட்பாளராக அடுத்து யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அமித் ஷா தலைமையில் மூவர் குழு பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவர்தான் ஜனாதிபதி மாளிகையில் குடியேற வேண்டும் என பாஜகவும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக போராடி வருகின்றனர்.

அதற்கேற்றாற் போல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளரை தேர்வு செய்ய போட்டா போட்டி நடக்கிறது. அதேசமயம் மதசார்பற்ற வேட்பாளர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.
இதனிடையே ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 20-ஆம் தேதி நடைபெறும்.
இதற்காக அவ்வப்போது ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றனர். எதிர்க்கட்சிகள் தங்களது வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுக்கான குழுவை பாஜக அமைத்துள்ளது.
அதில் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, அமித் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். துணை ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு வெங்கையாவின் பெயர் அடிப்பட்ட நிலையில் அவர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளதால் அவருக்கு அப்பதவி இல்லை என்றே தெரிகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications