ஊழல் சொத்து சேர்க்கும் பாவ செயலை செய்பவர்களுடன் என்னால் இருக்க முடியாது.. நிதிஷ் குமார் ஆவேசம்
ஊழல் மூலம் சொத்து சேர்க்கும் பாவச் செயலை செய்பவர்களுடன் என்னால் இருக்க முடியாது என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா: பிகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிதிஷ் குமார், ஊழல் மூலம் சொத்து சேர்க்கும் பாவச் செயலை செய்பவர்களுடன் என்னால் இருக்க முடியாது என்று லாலுவை அட்டாக் செய்து பேசியுள்ளார்.
பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளமும், ராஷ்ட்ரீய ஜனதாதளமும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது. கூட்டணி ஆட்சி சுமார் 2 ஆண்டுகளை எட்டியிருந்த நிலையில் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

ரயில்வே ஓட்டல்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ விசாரணையை மத்திய அரசு முடக்கி விட்டது. இதனால் துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என்று நிதிஷ் குமார் கூறினார். இதற்கு லாலு தரப்பு மறுப்பு தெரிவித்ததையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்.
அதனைத் தொடர்ந்து நிதிஷ் குமார் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றார். சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் 132 வாக்குகள் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் நிதிஷ் குமார், பிகார் மக்கள் அளித்த தீர்ப்பானது அவர்களுக்கு சேவைப் பணியாற்றுவதற்கு. மக்கள் நீதிமன்றம்தான் பெரிய நீதிமன்றம், மக்களுக்காகப் பணியாற்றுவதே என்னுடைய கடமை. ஒரு குடும்பத்திற்காக என்னால் பணியாற்ற முடியாது என்று கூறினார்.
மேலும், மதச்சார்பின்மை குறித்து தனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் மதச்சார்பின்மை என்பது நடைமுறைப்படுத்தக் கூடிய விஷயமாகும் என்றும் தெரிவித்த நிதிஷ், மதச்சார்பின்மை என்ற பெயரில் ஊழல் வழியாகச் சொத்துக்கள் சேர்க்கும் பாவ செயலைச் செய்பவர்களுடன் தன்னால் இருக்க முடியாது என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications