வளர்த்தா தாடி... எடுத்தா மொட்டை...: திருப்பதியில் ஓ.பி.எஸ் தரிசனம்
திருப்பதி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதையொட்டி, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி, வெங்கடாசலபதியை தரிசனம் செய்துள்ளார். இதன்மூலம் தமிழக அமைச்சர்களில் மொட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்றதையடுத்து அவரது முதல்வர் பதவி பறிக்கப்பட்டதுடன், அவருடைய எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டது.
இந்த சோகத்தில் ஓ.பன்னீர் செல்வம் மட்டுமல்லாமல், பல்வேறு அமைச்சர்களும், அதிமுகவினரும், ஜெயலலிதா வெளியே வர வேண்டும் என்று வேண்டி முடி வளர்த்து வந்தனர். தாடியுடன் வலம் வந்தனர். ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்தததும் பலர் மொட்டை போட்டனர். ஆனால் அமைச்சர்கள் மொட்டையெல்லாம் அடிக்கவில்லை. சிலர் தாடியை எடுத்து விட்டனர்.

கோவில்களில் வேண்டுதல்கள்
ஜெயலலிதா விடுதலையாக வேண்டி பல்வேறு ஆலயங்களில் யாகங்கள், தீர்த்தக்குடங்கள், காவடிகள், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட வேண்டுதல்களை ஓ.பன்னீர் செல்வம், செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் செய்து வந்தனர்.

கரூரில் செந்தில் பாலாஜி
கடந்த மே 11ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையான உடன், நீண்ட நாட்களாக தாடியுடன் வலம் வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தாடியுடன், தலைமுடியையும் காணிக்கையாக்கி மொட்டை போட்டு நிவர்த்தி செய்தார்.

திருச்செந்தூரில் எஸ்.பி. வேலுமணி
அதேபோல அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருச்செந்தூர் முருகன் கோவிவில் முடிகாணிக்கை செலுத்தி தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

திருப்பதியில் ஓ.பி.எஸ்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதையொட்டி, ஓ.பன்னீர்செல்வம் முடி காணிக்கை செலுத்தியுள்ளார். இன்று காலையில் திருமலையில் முடி காணிக்கை செலுத்திய அவர், வெங்கடாஜலபதியை தரிசித்தார்.

அதிகாரிகள் வரவேற்பு
திருப்பதி ஏழுமைலையானை தரிக்க நேற்று இரவு திருமலைக்கு வந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய அவர், இன்று காலை முடி காணிக்கை செலுத்தினார். சிறப்பு தரிசனம் வரிசையில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications