காஷ்மீர் எல்லையில் பாக். தொடர்ந்து தாக்குதல்.. 5 இந்திய வீரர்கள் படுகாயம்.. தொடரும் பதற்றம்!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை புகுந்து நேற்று தாக்குதல் நடத்தியது. 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து பாகிஸ்தான் இதற்கு உடனடியாக பதில் அளிக்கும் என்று கூறியது. அதன் ஒருகட்டமாக தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று மாலை
நேற்று மாலையில் இருந்தே பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று காஷ்மீரின் சோபியான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

தொடர் தாக்குதல்
இன்றும் அந்த தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. காஷ்மீர் எல்லையில் 12-15 இடங்களில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கியமாக சோபியான் பகுதியில் இருந்து பாகிஸ்தான் இந்த தாக்குதல் நடத்தி வருகிறது.

மிக மோசம்
பாகிஸ்தானில் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பாக். ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பலியாகாத வகையில் இந்திய ராணுவம் பாதுகாப்பாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் மிகவும் உயர் ரக ஆயுதங்களை வைத்து தாக்குதலை அரங்கேற்றி வருகிறது.

எத்தனை பேர்
நேற்று மாலை 6.30 மணியில் இருந்து பாக். தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று அதிகாலை நடந்த தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இந்திய ராணுவமும் தொடர்ந்து திருப்பி தாக்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications