நடிகர் ஜெயராம் விழாவில் கருப்புக் கொடி... போலீஸாருடன் மோதிய இளைஞர்!
கோழிக்கோடு: பிரபல மலையான நடிகர் ஜெயராம் கலந்து கொண்ட விழாவில் இளைஞர் ஒருவர் கருப்புக் கொடி காட்ட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள இஞ்சோடி என்ற இடத்தில், பள்ளி மாணவர்கள் இடையே கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக முதல் பரிசு பெறும் பள்ளிக்கு 117 பவுன் தங்க கோப்பை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டிகளில் வென்று கோழிக்கோடு மற்றும் பாலக்காடு அணிகள் முதல் பரிசை பகிர்ந்து கொண்டன.

இந்த நிகழ்ச்சியில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கேரள கல்வித்துறை அமைச்சர் அப்துரப் உள்பட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான மாணவ-மாணவிகளும் திரண்டு இருந்தனர்.
விழா மேடையில் அமைச்சர் அப்துரப் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு இளைஞர் கையில் கருப்புக் கொடியுடன் கோஷம் போட்டபடி விழா மேடை அருகே வந்தார். பிறகு மேடை மீது ஏறி பாய்ந்து கல்வி அமைச்சரை நோக்கி செல்ல முயன்ற அந்த இளைஞரை, பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மடக்கிப்பிடித்தார். இதனால் விழாமேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், மற்ற காவலர்கள் உதவியுடன் அந்த இளைஞரை, போலீசார் வேனில் ஏற்றிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. இயக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், என்ன காரணத்துக்காக அவர் கருப்புக் கொடியுடன் விழா மேடைக்கு செல்ல முற்பட்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications