ஜனாதிபதி தேர்தல்: சோனியா மற்றும் ராகுலுடன் சரத் பவார் தீவிர ஆலோசனை!
ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுடன், சரத்பவார் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து, புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளன.

ஆளும் பாஜக சார்பாக, யார் நிறுத்தப்படுவார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து, காங்கிரஸ் தலைமையில் பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளன. இதற்கு, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தும் உள்ளன.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் நேரில் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனாதிபதி தேர்தலில் என்னைத் தவிர யார் போட்டியிட்டாலும் ஆதரவு தர தயாராக உள்ளேன். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் பொது வேட்பாளரை நிறுத்துவது நல்ல முடிவு என்றார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications