கூட்டுறவு வங்கிகளில் பணம் மாற்ற முடியவில்லை.. ரிசர்வ் வங்கி வாசலில் அமர்ந்து கேரள முதல்வர் தர்ணா
கூட்டுறவு வங்கிகள் மூலம் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கேரள முதல்வர் பினராய் விஜயன் போராட்டம் நடத்தி வருகிறார்.
திருவனந்தபுரம்: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் மாற்றிக் கொள்வதற்கு வசதியாக ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரி திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கியின் வாசல் முன்பு அமர்ந்து கேரள முதல்வர் பினராய் விஜயன் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து பொதுமக்கள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து மக்கள் வங்கி மற்றும் அஞ்சலகங்களுக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி வருகின்றனர்.

இதனையடுத்து கூட்டுறவு வங்கிகளுக்கு விவசாயிகள் சென்று பழைய நோட்டை மாற்ற முயற்சி செய்தனர். அப்போது அவர்களால் அங்கு பணத்தை மாற்ற முடியவில்லை. மேலும், புதிய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்புவதில்லை என்று விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பழைய நோட்டுக்களை மாற்ற கூட்டுறவு வங்கிகளை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுதொடர்பாக கேரள அரசு பல முறை கோரியும் ரிசர்வ் வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத ரிசர்வ் வங்கி கண்டித்து அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கியின் வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அவருடை அமைச்சர்கள் அனைவரும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பினராய் விஜயன், "நாட்டின் முதுகெலும்பாக இருக்க கூடியது விவசாயம் சார்ந்த பொருளாதாரம் தான். அதனை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும். இதுதொடர்பாக வரும் 21ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளனர்" என்று கூறினார்.
இன்று மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்தப் போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. போராட்டத்தில் ஆளும் கட்சி மட்டும் இல்லாமல் பல்வேறு கட்சிகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications