காற்றில் கலந்த கலாம்... டிவிட்டர் பக்கம் மட்டும் உயிர்ப்போடு இருக்கும்
டெல்லி: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் டிவிட்டர் பக்கத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
உலகத்தில் வாழும் இந்தியர்கள் அனைவர் மனதிலும் ‘மக்களின் ஜனாதிபதி'யாக இடம் பிடித்த அப்துல் கலாம், நேற்று மாரடைப்பால் காலமானார்.

தனது மறைவுக்கு 10 மணி நேரத்திற்கு முன்பு அவர் டிவிட்டரில் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் அவர், ‘ஷில்லாங் போகிறேன். லிவபிள் பிளானட் குறித்து பேசுகிறேன்' என அவர் பதிவு செய்திருந்தார். அது தான் அவர் கடைசியாக வெளியிட்ட டிவிட்டர் பதிவு.
அந்த டிவிட்டில் அவர் கூறியிருந்த படி, ஷில்லாங்கில் பேசிக் கொண்டிருந்த போது தான் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது.
காலத்தால் அழியாத தலைவராக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டவர் கலாம். எனவே, அவரது டிவிட்டர் பக்கத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க அவருக்கு நெருக்கமானவர்கள் சேர்ந்து முடிவு செய்துள்ளனர்.
ஆனால், கலாமின் டிவிட்டர் பக்கத்தின் பெயரை மட்டும், ‘கலாமின் நினைவுகளுடன்' ('In memory of Dr Kalam') என அவர்கள் மாற்றியுள்ளனர். தொடர்ந்து இப்பக்கத்தில் கலாமின் எண்ணங்கள், கொள்கைகள், இந்தியாவை பற்றிய அவரது கனவுகள் போன்றவற்றை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலாமின் டிவிட்டர் பக்கத்தை 1.4 மில்லியன் பேர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications