தேசிய கீதத்தை புறக்கணிக்காமல் இருக்க ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைமுறைகளில் மாற்றம்
குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்தை புறக்கணிக்காமல் இருக்க புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
திருவனந்தபுரம் : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்தை யாரும் புறக்கணிக்கக் கூடாது என்பதால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் புதிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நெறிமுறைப்படி குடியரசுத் தலைவர் பேசிய பின்னர் விழாவில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்படும். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். இது தான் காலம் காலமாக பின்பற்றப்படும் நெறிமுறை.
குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த் விழாவில் பேசும் போது "கடந்த 3 மாதங்களாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு, விழாவில் பங்கேற்பவர்கள் தேசிய கீதத்தை புறக்கணிக்காமல் இருக்க செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு கோரிக்கைக்கள் வந்துள்ளன. அதில் குடியரசுத் தலைவர் உரை முடிந்தவுடன் பலரும் அரங்கை விட்டு சென்றுவிடுவதால் தேசிய கீதத்தை புறக்கணிப்பதாக கூறப்பட்டுள்ளது."

நெறிமுறைகளில் மாற்றம்
எனவே ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என்று குடியரசுத் தலைவர் மாளிகை முடிவு செய்துள்ளது. இதன்படி குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னரே நன்றி தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னர் விழா சிறப்புரை ஆற்றப்படும். இந்த உரைக்குப் பின்னர் குடியரசுத் தலைவரும் தேசிய கீதப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தி விட்டு பின்னர் தான் அரங்கை விட்டு செல்வார்.

ராம்நாத் கோவிந்த் செயலுக்கு பாராட்டு
கடந்த முறை கொல்லத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த் ராணுவ மரியாதையை ஏற்கும் போது சாரல் மழை பெய்தது. எனினும் குடை வேண்டாம் என்று கூறி மழையில் நனைந்தபடியே ராணுவ மரியாதையை திறந்த வாகனத்தில் சென்றபடியே ஏற்றார்.

திரையரங்குகளில் தேசிய கீதம்
திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன்னர் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. திரைப்படம் முடிந்த பின்னர் இசைக்கப்பட்டால் பலரும் புறக்கணித்து விட்டு செல்கிறார்கள் என்பதால் உச்சநீதிமன்றம் தேசப்பற்றை வளர்க்கும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டது.

தேசிய கீதத்திற்காக
இந்நிலையில் குடியரசுத் தலைவர் அலுவலகமும் தேசிய கீதத்தை புறக்கணிக்கக் கூடாது என்பதற்காக சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் குடிமகனிடம் இருந்தே இந்த மாற்றம் தொடங்கியிருப்பது இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications