பலாத்காரம் செய்து குழந்தை கொலை.. மன்னிப்பே கிடையாது.. இருவரின் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி
குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற இருவரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.
டெல்லி: குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற இருவரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். அடுத்த மாதம் அவரின் பதவிக் காலம் முடியும் நிலையில் அவர் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்.
இருவரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளதை அடுத்து, நிராகரித்த கருணை மனுக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
குற்ற வழக்குகளில் தூக்கு தண்டனை பெற்றவர்கள் அதிலிருந்து விடுவிக்க ஜனாதிபதியிடம் முறையிடுவது வழக்கம். கருணை மனுக்களை ஏற்பதோ நிராகரிப்பதோ ஜனாதிபதியின் உரிமை.

குழந்தை பாலியல் செய்து கொலை
குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதே போன்று பொறியாளர் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் மற்றொருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் தங்களுக்கு தூக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மனு செய்திருந்தனர்.

கருணை நிராகரிப்பு
இந்நிலையில், இந்த மனுவை பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். அடுத்த மாதத்தோடு தனது பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

30 ஆக உயர்வு
இதுவரை இருந்த ஜனாதிபதிகளில் பிரணாப் முகர்ஜிதான் அதிகமான கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இதன் மூலம் நிராகரிப்பு மனுக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

பேரறிவாளன் கருணை மனு
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்கனவே ஜனாதிபதி பிரதிபா பாட்டீலால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் போன்றே பலரும் தூக்கு தண்டனையில் இருந்து விலக்குக் கோரி ஜனாதிபதியின் கருணைக்காக காத்திருக்கின்றனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications