யாருக்கு அரசு வேலை? டாஸ் போட்டு முடிவு செய்த அமைச்சர்! வீடியோவால் சர்ச்சை
பஞ்சாப்பில் அரசு கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு இருவர் போட்டிபோட்ட நிலையில் அமைச்சர் டாஸ் போட்டு முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சண்டிகர்: பஞ்சாப்பில் அரசு கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு இருவர் போட்டிபோட்ட நிலையில் அமைச்சர் டாஸ் போட்டு முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை தேர்வு செய்ய அம்மாநில தேர்வாணையம் அண்மையில் தேர்வு நடத்தியது. தேர்வு எழுதியவர்களில் 37 பேர் தேர்வாகினர்.

இருவர் போட்டி
இதில் பாட்டியாலாவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் ஒரே பதவிக்கு இருவர் தேர்வாகிருந்தனர். அதில் ஒருவர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தார். மற்றொருவர் அதிக ஆண்டுகள் பயிற்சி பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

டாஸ் போட்ட அமைச்சர்
இதனால் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போன பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் சரண்ஜித் சிங் யாருக்கு அரசு வேலையை வழங்குவது என யோசித்தார். இருவரும் சம தகுதியுடன் இருந்ததால் ‘டாஸ்' போட்டு பார்த்துள்ளார்.

பதவிநீக்கம் செய்ய வேண்டும்
இந்த காட்சிகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து பூவா தலையா போட்டு வேலை கொடுத்தவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

ஒப்புதலுக்கு பிறகே டாஸ்
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள அரசு, விரிவுரையாளர் நியமனத்தில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் நோக்கத்திலேயே இவ்வாறு நியமனம் மேற்கொள்ளப்பட்டதாகவும் விரிவுரையாளர்களில் இருவரின் ஒப்புதலுக்கு பிறகே டாஸ் போட்டு நியமனம் செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

லஞ்சத்தை ஒழித்து உள்ளேன்
இதுகுறித்து கூறிய அமைச்சர் சரண்ஜித் சிங் முந்தைய பாரதீய ஜனதா, சிரோமணி அகாலி தள கூட்டணி ஆட்சியில் பணி நியமனத்தில் லஞ்சம் தாண்டவம் ஆடியது என்றும் தான்தான் அதை ஒழித்து உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications