சயீதை வைதிக் சந்தித்ததில் எந்தத் தவறும் இல்லை - ராம் ஜேத்மலானி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பத்திரிகையாளர் வைதிக், ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தானில் வைத்து சந்தித்ததில் எந்தத் தவறும் இல்லை என்று மூத்த வழக்கறிஞரும், முன்னாள் பாஜக முக்கியத் தலைவருமான ராம் ஜேத்மலானி கூறியுள்ளார்.

இன்று வைதிக் - சயீத் சந்திப்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கிப் போட்டது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை வைத்து ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தன.
இந்த நிலையில் மூத்த வழக்கறிஞரான ராம் ஜேத்மலானி இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், வைதிக் சுதந்திரமான மனிதர். அவர் பாகிஸ்தானுக்குப் போய் ஹபீஸ் சயீத்தை பேட்டிதான் எடுத்துள்ளார். இதில் எந்தத் தவறும் இல்லை. அவர்களது சந்திப்பிலும் தவறில்லை என்று கூறினார் ஜேத்மலானி.












Click it and Unblock the Notifications