ஆர்.எஸ்.எஸ்.-ன் இடஒதுக்கீடு எதிர்ப்பு பேச்சு, தாத்ரி சம்பவங்களே பீகார் தோல்விக்கு காரணம்- பாஸ்வான்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் படுதோல்விக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் இடஒதுக்கீட்டு எதிர்ப்பு பேச்சு, தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முஸ்லிம் பெரியவர் அடித்து கொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்களே அடிப்படை காரணமாக அமைந்தன என்று லோக் ஜனசக்தித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பீகாரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஸ்வானின் லோக் ஜனசக்தியும் இடம்பெற்றிருந்தது. ஆனால் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது பா.ஜ.க. அணி.

இத்தேர்தல் தோல்வி குறித்து முதல் முறையாக ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இதை மகா கூட்டணி கட்சிகள் தவறாக மக்களிடத்தில் பிரசாரம் செய்தன. பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால் இடஒதுக்கீட்டையே ரத்து செய்துவிடுவார்கள் என பிரசாரம் செய்தனர். இது பா.ஜ.க. அணிக்கு தோல்வியாக அமைந்துவிட்டது.
அதேபோல் ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி. பிரிவு வாக்குகளை எங்கள் பக்கம் திருப்புவதிலும் தோல்வி அடைந்துவிட்டோம். பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் திட்டவட்டமாக இடஒதுக்கீட்டை ரத்து செய்யவே மாட்டோம் என கூறியிருந்த போதும் அது கை கொடுக்காமல் போனது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், குஜராத் இடஒதுக்கீட்டு பிரச்சனையை முன்வைத்து கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் லாலுவும் நிதிஷூம் அதை பீகாருக்கு பயன்படுத்திக் கொண்டனர்.
இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் முஸ்லிம் பெரியவர் படுகொலை செய்யப்பட்டது என்பது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை. அதையும் பீகார் தேர்தல் களத்தில் முக்கிய பிரச்சனையாக்கிவிட்டனர்.
பீகாரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கிடைக்காது என பிரசாரம் செய்தனர். இதனால்தான் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம்.
பீகாரில் மகா கூட்டணி 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி நடத்த முடியாது. எந்த ஒரு பெருவெள்ளமுமே 6 மாத காலத்துக்கு மேல் தாங்கப் போவதில்லை. பீகாரைப் பொறுத்தவரை சமூக நீதிப் பார்வை கொண்ட மாநிலம்... வந்தேறியா? பீகாரியா போன்ற பிரச்சனையெல்லாம் இந்த மாநிலத்தில் கிடையாது.
இவ்வாறு ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications