தீர்ப்பு வந்த ஒருவருடத்திற்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்- வி.எச்.பி
விரைவில் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்படும் என்று வி.எச்.பி அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
புவனேஷ்வர்: விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுரேந்திர ஜெயின் தெரிவித்து உள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்து அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கை. பல சர்ச்சைகள் இந்த விஷயத்தில் அடங்கி உள்ளன. இந்நிலையில் விரைவில் கோவில் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று விஷ்வ இந்து பரிஷித் அமைப்பு தெரிவித்து உள்ளது. இதை அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுரேந்திர ஜெயின் தெரிவித்தார்.

விஷ்வ இந்து பரிஷித்தின் முக்கியத்தலைவர்கள் கூட்டம் இந்த மாத இறுதியில் நடக்க இருக்கிறது. மூன்று நாட்கள் ஒரிசா மாநிலம் புவனேஷ்வரில் வரும் நவம்பர் 27ம் தேதி ஆரம்பிக்கும் இந்த கூட்டத்தில் கோவில் கட்டும் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்து உள்ளனர்.
மேலும் இதுகுறித்து பேசிய சுரேந்திர ஜெயின், இனிமேலும் இந்த விஷயத்தில் நாங்கள் தாமதிக்கமாட்டோம். ஏற்கனவே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. புகழ்பெற்ற சிற்பி ஒருவரின் தலைமையில் மாதிரிக்கோவில் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இந்து தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றார்.
மேலும் மதப்பிரச்னைகள், பசுவதை, லவ் ஜிகாத் ஆகிய பிரச்னைகளும் இதில் விவாதிக்கப்பட இருக்கின்றன. இந்துக்களைக் காப்பாற்ற சரியான நடவடிக்கை எடுக்காமல் சில மாநில அரசுகள் தவறி வருகின்றன. அவர்களைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்றார்.
ஏற்கனவே பாபர் மசூதியை இடித்ததால் ஏற்பட்ட கலவரத்தின் சுவடுகளே இன்னும் மறையாத நிலையில் மீண்டும் ராமர் கோவில் விவகாரத்தை வைத்தே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மீண்டும் தனது இழந்த அரசியல் செல்வாக்கை திரும்பப் பெறவே பா.ஜ.க தனது இந்து அமைப்புகள் மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறதோ என எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் வாழப்பாடி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பாயுடன் மணமக்கள் போட்டா போட்டி.. 5 நிமிடத்தில் 90 திருமணம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications