இந்தியா, நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
டெல்லி: இந்தியா மற்றும் நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்குக் காரணம் மக்கள் தொகையில் அடர்த்தி அதிகமாக இருப்பதுதான் என்றும் கூறியுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25ம்தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்திய மாநிலங்களிலும் எதிரொலித்தது.
இந்தியா - நேபாள எல்லைப்பகுதிகளில் வசித்தவர்களும் உயிரிழந்தனர். தொடர்ந்து அவ்வப்போது லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் ஆய்வு
நேபாள நிலநடுக்கத்திற்கு பிறகு காத்மண்டுவில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நில அதிர்வுகள் குறித்து உலகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள முக்கிய புவிஆராய்ச்சி மையங்கள் வாயிலாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்பட்ட ரேடார் காட்சிகளையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இமயமலையில் நிலப்பரப்பு
அதனடிப்படையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு இமயமலைப்பகுதியில் உள்ள நிலப்பரப்பின் மேல் தட்டு நகர்ந்துள்ளதாகவும், இதில் பெரும்பகுதி ஒருபுறமாக இறுகியிருப்பதால் திடீரென எப்போது வேண்டுமானாலும் அந்த அழுத்தமானது விடுவிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

எப்போது ஏற்படும்?
இந்த அழுத்தமானது ஒரு மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், எப்போது இந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பதை உறுதியாகக் கூற இயலாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்திற்கு காரணம்
இதனிடையே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜீன் பிலிப் ஆவோவாக் சமீபத்தில் நிலநடுக்கம் தொடர்பான ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் தொகையின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் வட இந்தியாவின் கங்கை சமவெளி பகுதியிலும், நேபாளத்தின் மேற்கு பகுதியிலும் எதிர்காலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications