அயோத்தி தீர்ப்பு.. ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்.. ஆர்பிஎப் படைக்கு லீவு ரத்து
Recommended Video
டெல்லி: அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் விடுமுறைகள் அனைத்தையும் ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பணிக்காலம் வரும் 17ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ராமஜென்மபூமி - பாபர் மசூதி குறித்த தீர்ப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் மும்பை, டெல்லி மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசங்களில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ள 78 பெரிய ரயில்நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில்நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பில் ரயில்வே பாதுகாப்புப் படை
வரும் 17ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அதற்குள்ளாக அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தீர்ப்பு வெளியானவுடன் கலவரங்கள் நிகழ வாய்ப்புள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசங்களில் முக்கிய ரயில்நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் விடுப்புகளை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு
ரயில்நிலையங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், பாலங்கள் போன்ற பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

17ம் தேதிக்கு முன்பு தீர்ப்பு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், ராமஜென்ம பூமி - பாபர் மசூதி குறித்த தீர்ப்பு அதற்குள்ளாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே பாதுகாப்புப் படை அதிகரிப்பு
இன்னும் சில தினங்களில் அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், ரயில்நிலையங்களை ஒட்டியுள்ள கோயில்கள் உள்ளிட்டவற்றிலும் பாதுகாப்பை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயில் நிர்வாகிகளும் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மண்டலங்களுக்கு அறிவிப்பு
ரயில்கள் வராத நேரங்களில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்வகையில் 30 சதவிகித லைட்டுகளை மட்டுமே உபயோகிக்க ரயில்நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், 100 சதவிகித லைட்டுகளையும் உபயோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் நடவடிக்கை
இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் குறிப்பாக அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவத்தினரை பாதுகாப்புப் பணியில் உள்துறை அமைச்சகம் ஈடுபடுத்தியுள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications