நாலு சுவற்றுக்குள் ஆபாச படம் பார்ப்பதை கோர்ட் தடுக்க முடியாது: தலைமை நீதிபதி தத்து
டெல்லி: இந்தியாவில், ஆபாச இணையதளங்களை தடை செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. நாலு சுவற்றுக்குள் ஆபாச படம் பார்ப்பதை தடுத்தால், தனது அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுவிட்டதாக யாராவது புகார் கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மனு தாக்கல்
இந்தியாவில் செயல்படும் ஆபாச வெப்சைட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், வழக்கறிஞர் கமலேஷ் வாஸ்வனி, உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். அதில் "இந்தியாவில் 4 கோடி ஆபாச வெப்சைட்டுகள் உள்ளன. இவற்றுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இடைக்கால தடை
இதனிடையே, மனு மீதான விசாரணை, தற்போது, தலைமை நீதிபதி தத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆபாச வெப்சைட்டுகளை முடக்க அரசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அப்போது, மனுதாரர் சார்பில், கேட்டுக்கொள்ளப்பட்டது.

இடைக்கால தடை
இதனிடையே, மனு மீதான விசாரணை, தற்போது, தலைமை நீதிபதி தத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆபாச வெப்சைட்டுகளை முடக்க அரசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அப்போது, மனுதாரர் சார்பில், கேட்டுக்கொள்ளப்பட்டது.

உரிமை பாதிக்கும்
இதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார். "இதுபோன்ற இடைக்கால உத்தரவுகளை கோர்ட் பிறப்பிக்க முடியாது. ஏனெனில், அப்படி பிறப்பித்தால், 18 வயது நிரம்பிய யாராவது கோர்ட்டுக்கு வந்து, இந்திய அரசியல் சாசனம் பிரிவு 21ன்கீழ், வழங்கப்பட்டுள்ள உரிமையை முடக்க முடியாது. எனக்கு 18 வயது நிரம்பிவிட்டது. நான்கு சுவற்றுக்குள் நான் ஆபாச வெப்சைட்டுகளை பார்க்கிறேன். எப்படி தடை போட முடியும் என்று கேட்க கூடும்" என்று தத்து தெரிவித்தார்.

மத்திய அரசு எடுக்கட்டும்
அதேநேரம், ஆபாச வெப்சைட்டுகளால் தீமை விளையும் என்பதையும் தத்து மறுக்கவில்லை. "இது சீரியசான விஷயம்தான். ஏதாவது நடவடிக்கை எடுத்தாகப்பட வேண்டும். இந்த விவகாரத்தில், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று தலைமை நீதிபதி தத்து தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications