ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட்டில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது 2-ம் கட்ட தேர்தல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 18 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 20 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவையின் 2ம் கட்ட தேர்தல் நடந்தது.
இந்தத் தொகுதிகளில் பல்வேறு கட்சித் தலைவர்கள் நடத்திய அனல்பறக்கும் பிரச்சாரம் நேற்றுமுன்தினம் முடிவடைந்தது. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தில் தீவிரமாக செயல்பட்ட சஜத் லோனே மற்றும் 4 மாநில அமைச்சர்கள் 2 கட்டத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவர்கள் ஆவர்.
ஜம்முவில் 9 தொகுதிகளும் காஷ்மீரில் 9 தொகுதிகளும் இன்று தேர்தலை எதிர்கொள்கின்றன. மொத்தம் 175 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 13.35 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 20 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 16 தொகுதிகள் பழங்குடியினருக்கான ரிசர்வ் தொகுதிகளாகும். 35 பெண்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் முன்னாள் முதல்வர்கள் அர்ஜுன் முண்டா, மதுகோடா மற்றும் 3 அமைச்சர்கள் முக்கியமானவர்கள்.
இதனிடையே வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மதியம் 2 மணிவரையிலான நிலவரப்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட்டில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. எனவே இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்போது இது சுமார் 65 சதவீதத்தை எட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ள காஷ்மீரிலும், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள ஜார்கண்டிலும் தேர்தல் அமைதியாக நடந்துள்ளதும், மக்கள் நல்ல ஆதரவை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications