ராகுலும், பிருத்விராஜ் சவானும் தான் காங், தேசியவாத காங். பிளவுக்குக் காரணம் - பவார் குற்றச்சாட்டு
மும்பை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும்தான் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறிய காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 15 ஆண்டு காலமாக இருந்து வந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சமீபத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் முறிந்து போனது.
இந்த நிலையில் இரு கட்சியினரும் பிரிவுக்கு யார் காரணம் என்பது குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ராகுல் தான் காரணம்...
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராகுல் காந்தியைக் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், நாங்கள் நீண்ட காலமாகவே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ராகுல் காந்தியும், அவரது கோஷ்டியும் கூட்டணிக் கட்சிகளை மட்டம் தட்டுவதும், ஓரம் கட்டுவதுமாக உள்ளனர்.
நாங்களும் காங்கிரஸ்காரர்கள் தான்...
நாங்களும் அதே காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்கள்தான் என்பதை அவர் மறந்து விட்டார். எனவே அவரது செயல்பாடுகள் அவர் கட்சிக்கு வந்தது முதலே எங்களுக்கு நன்றாக தெரிகிறது.
வதந்தி...
தேசியவாத காங்கிரஸுக்கு எதிராக மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் வதந்தி பரப்பி வந்தார். விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷில் குமார் ஷிண்டே, அசோக் சவான் ஆகியோர் முதல்வராக இருந்தபோது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை.
பழி வாங்கி விட்டார்...
ஆனால் பிருத்வராஜ் சவான் எங்களைப் பழிவாங்கி வருகிறார். லோக்சபாதேர்தலில் 1999ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றுப் போனதை மனதில் வைத்து இப்படிச் செயல்படுகிறார் அவர்.
அவமதிப்பின் விலை...
கூட்டணிக் கட்சியினரை அவமதித்த காங்கிரஸ் கட்சி அதற்கான விலையைக் கொடுத்துள்ளது.
அஜீத் பவாரின் ஆசை...
வரும் சட்டசபைத் தேர்தலில் எனது உறவினர் அஜீத் பவாரை முதல்வர் வேட்பாளராக நாங்கள் அறிவிக்கவில்லை. அனைவரும் இணைந்தே தேர்தலை சந்திக்கிறோம். அதேசமயம், அஜீத் பவார் ஆசைப்பட்டால் அதில் தவறும் இல்லை.
மோடி அலை இல்லை...
மோடி அலை இனியும் கிடையாது. மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் அது செல்லாது. அது எடுபடாது. அது ஓயத் தொடங்கி விட்டது. அதை இடைத் தேர்தலில் நாம் பார்த்தோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முறிந்த கூட்டணி....
மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பெரும் பிரச்சினை வெடித்தது. இறுதியில் கூட்டணி உடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
2021 vs 2026 தேர்தல்! எவ்வளவு வித்தியாசம்..? ராகுல் காந்தி பழைய ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா? -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி?












Click it and Unblock the Notifications