மோகன் பகவத் அல்லது 'பசுமை புரட்சி தந்தை' சுவாமிநாதன்! சிவசேனையின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் இது
டெல்லி: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிக்காவிட்டால், பசுமை புரட்சியின் தந்தை என வர்ணிக்கப்படும் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சிவசேனை தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
மோகன் பகவத் பெயரை பாஜக பரிசீலிக்காவிட்டால் சுவாமிநாதன் பெயரை நாங்கள் முன்மொழிய காரணம் அவர் விவசாயத்திற்காக செய்த பணிகள்தான். விவசாயம் தற்போது மோசமான நிலைக்கு போய்க் கொண்டுள்லது. இந்த நேரத்தில் சுவாமிநாதனுக்கு உயரிய பதவி கிடைத்தால் அது விவசாய வளர்ச்சிக்கு பயன்படும் என கருதுகிறோம்.

சுவாமிநாதன் உலகம் போற்றும் சிறந்த இந்திய விஞ்ஞானிகளில் ஒருவர். உணவு பஞ்சத்தில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க பசுமை புரட்சி நடைபெற்றது. அதை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் இவராகும். அதேநேரம், இதற்காக ஒரு தரப்பினரால் இன்றளவும் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார் இவர். பசுமை புரட்சி மூலம், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தினார் என்பது அந்த குற்றச்சாட்டுகளில் ஒன்று.
சுவாமிநாதனுக்கு தற்போது 91 வயதாகிறது என்பதால் அவரை குடியரசு தலைவர் போட்டியில் பாஜக பரிசீலிக்காது என்றே தெரிகிறது.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications