ஜூன் 4ல் கருப்பு பண மீட்பு குழுவின் முதல் கூட்டம்
டெல்லி: கருப்பு பணம் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட புலனாய்வு குழுவின் முதல் கூட்டம் ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மோடி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதற்காக புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவுக்கு தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷாவும், துணைத் தலைவராக அர்ஜித் பசாயத்தும் நியமிக்கப்பட்டனர். மேலும், 11 பேர் இந்த குழுவினர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புலனாய்வு குழுவின் தலைவர் எம்.பி.ஷா மற்றும் துணைத் அர்ஜித் பசாயத் ஆகியோர் ஜூன் 4ஆம் தேதி சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கறுப்புப்பண மீட்புக்குழுவின் முதல் கூட்டத்தில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பது குறித்தும், ஏற்கனவே, நடைபெற்ற விசாரணையின் நிலைமை, தற்போதுள்ள நிலை மற்றும் அனைத்து துறைகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications