பி.சி.சி.ஐ. தலைவராக மீண்டும் தொடர அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் 'சீனி' மனு
டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் தம் மீது எந்தத் தவறும் இல்லை என்று முட்கல் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக தாம் தொடருவதற்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் என். சீனிவாசன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த 6-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை விசாரணை செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் விசாரணையின் போது ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தினால் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த என்.சீனிவாசன் விலகி இருக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அண்மையில் வெளியான முகுல் முட்கல் குழு சமர்பித்த இறுதி அறிக்கையில் சீனிவாசன் எந்த தவறும் செய்யவில்லை என்று தகவல் வெளியானது.
இதையடுத்து தன்னை மீண்டும் பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் என்.சீனிவாசன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி அறிக்கையில் நான் ஐ.பி.எல். 6-வது போட்டியில் எந்த தவறும் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. என் மீது குற்றச்சாட்டு வைக்கும்படியான எந்த தகவலும் அதில் இல்லை.
இந்த அறிக்கையின் மூலம் என் மீது இதற்கு முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பது புலனாகின்றது. எனவே நான் மீண்டும் பி.சி.சி.ஐ. தலைவராக தொடர அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சீனிவாசன்.
சீனிவாசன் சமர்பித்துள்ள மற்றொரு மனுவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை கொண்டுள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் எனது மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, இந்தியா சிமெண்ட்ஸ் மீது அறிவிக்கப்படும் எந்த ஒரு கடினமான உத்தரவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐ.பி.எல் போட்டியையும், கிரிக்கெட்டையும் பாதிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications