பி.சி.சி.ஐ. தலைவராக மீண்டும் தொடர அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் 'சீனி' மனு
டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் தம் மீது எந்தத் தவறும் இல்லை என்று முட்கல் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக தாம் தொடருவதற்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் என். சீனிவாசன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த 6-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை விசாரணை செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் விசாரணையின் போது ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தினால் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த என்.சீனிவாசன் விலகி இருக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அண்மையில் வெளியான முகுல் முட்கல் குழு சமர்பித்த இறுதி அறிக்கையில் சீனிவாசன் எந்த தவறும் செய்யவில்லை என்று தகவல் வெளியானது.
இதையடுத்து தன்னை மீண்டும் பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் என்.சீனிவாசன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி அறிக்கையில் நான் ஐ.பி.எல். 6-வது போட்டியில் எந்த தவறும் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. என் மீது குற்றச்சாட்டு வைக்கும்படியான எந்த தகவலும் அதில் இல்லை.
இந்த அறிக்கையின் மூலம் என் மீது இதற்கு முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பது புலனாகின்றது. எனவே நான் மீண்டும் பி.சி.சி.ஐ. தலைவராக தொடர அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சீனிவாசன்.
சீனிவாசன் சமர்பித்துள்ள மற்றொரு மனுவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை கொண்டுள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் எனது மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, இந்தியா சிமெண்ட்ஸ் மீது அறிவிக்கப்படும் எந்த ஒரு கடினமான உத்தரவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐ.பி.எல் போட்டியையும், கிரிக்கெட்டையும் பாதிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications