2ஜி வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு இல்லை.. விளாசும் சு.சாமி
டெல்லி: 2ஜி வழக்கிற்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை என்பதை போன்ற ஒரு கருத்தை காலையிலேயே சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.
இன்று 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இன்று காலை சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட ஒரு டிவிட்டில் கூறியுள்ளதாவது:

ராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர நான் வேண்டுகோள்விடுத்தபோது, ஜனதா கட்சியின் தலைவராக இருந்தேன். 2012ல் வழக்கில் வெற்றி பெற்றபோதும் நான் ஜனதா கட்சியில்தான் இருந்தேன். பாஜகவில் இல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.
When I filed for Sanction to prosecute Raja I was Janata Party President. When I won the case in SC in 2012, I was still JP. BJP nowhere.
— Subramanian Swamy (@Swamy39) December 21, 2017
இதன் மூலம், பாஜக இந்த வழக்கில் எந்த உதவியும் செய்யவில்லை என கூற முயன்றுள்ளார், சுப்பிரமணியன் சுவாமி. இவருக்கு நெட்டிசன்கள் அளித்துள்ள பின்னூட்டத்திலும், பாஜக கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கையே எடுக்கவில்லை. இன்னும் ஆட்சி காலம் முடிய 1.5 வருடமே உள்ள நிலையில், இன்னும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் நம்ப மாட்டார்கள் என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications